இறக்காமம் - வரிப்பத்தான்சேனை அபிவிருத்தி பெருவிழா




 


மாளிகைக்காடு செய்தியாளர்


பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் இறக்காமம்-  வரிப்பத்தான்சேனை அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் வரிப்பத்தான்சேனை தலைவர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீடு களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள டி- 100 வேலைத்திட்டத்தினூடாக பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள், மகளிர் அமைப்புக்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்யத்தேவையான பணிகள் இதன்மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரிப்பத்தான்சேனை அமைப்பாளரும், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என்.எம். ஆசிக், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. நைசர் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இறக்காமம்-  வரிப்பத்தான்சேனை அபிவிருத்தி பெருவிழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்ய தேவையான நிதியொதுக்கீட்டு ஆவணங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் எஸ்.எல். நிஷார், உயர்பீட உறுப்பினர் ஆசிரியர் ஏ. றியாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் ஏனைய பிரதேச இணைப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக்குழுவினர், வட்டார அமைப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாது இறக்காமம் -  வரிப்பத்தான்சேனை பிரதேச மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த டி- 100 திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெருந்திரளான மக்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.