சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட கொண்டாட்ட நிகழ்வுகள்




 சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட


கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்


மாளிகைக்காடு செய்தியாளர்

சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு விசேட இலச்சினை அறிமுக விழாவும் ஹஜ் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வும் நேற்று (03) இரவு புதன்கிழமை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.எம். அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிலோன் மீடியா போரத்தின் விசேட இலச்சினையினை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கௌரவ அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில உதவி செயலாளர் எஸ்.ஏ.எம்.இப்றாகிம் மக்கி, சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத், திருநெல்வேலி அலி சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.நெய்னார் முஹம்மட் கடாபி, ஏ.பி.எஸ். ஸ்மார்ட் லங்கா பிரைவேட் லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சமாதான ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.ஜெஸ்மின், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.