சிறுவர் உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு





 ( வி.ரி. சகாதேவராஜா)



கிழக்கு மாகாண கல்வித் திணைக் களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிமனையின் முறைசாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் உரிமைகள் தொடர்பான செயலமர்வு கடந்த புதன்கிழமை வியாழக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றன.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமாரின் வழிகாட்டலில் வலயக்கல்விப்பணிமனையின் முறைசாரா கல்வி பிரிவின் ஆசிரியர் ஆலோசகர் எம் .ஐ.அகமட்லெவ்வையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.

நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும்  சம்மாந்துறை அல்.அர்சத்  மகா வித்தியாலயத்திலும் கருத்தரங்குகள் நடைபெற்றன.

 இதன்போது சிறுவர் உரிமை மற்றும் கடமைகள் தொடர்பாக பூரண விளக்கம் அளிக்கப்பட்டது.