கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள்





 ( வி.ரி.சகாதேவராஜா)


 மன்னார் மாவட்டத்திலுள்ள 
திருக்கேதீஸ்வரம் இந்து சமய தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மினுக்கன் அரசினர் முஸ்லீம் பாடசாலை ஆகிய இரு பாடசாலை மாணவர்களுக்கு
இணைந்த கரங்கள் அமைப்பினால்  45 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வு  பாடசாலையின் அதிபர்.  பி.சே. தட்குருஸ்  தலைமையில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கிவருகின்றது .


மேலும் இப் பாடசாலைகள் கடந்த காலங்களில் யுத்ததித்தினால்  பாதிப்படைந்த பாடசாலைகளாகும்.

இணைந்த கரங்கள் இலங்கையில் இனமதம் மொழி பாராமல் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் மேலதிக கல்வி செயற்பாட்டிற்காண நிதி உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய வாண்மை விருத்தி முகாமையாளர் சோமஸ் பெரேறா , இரு பாடசாலையின் ஆசிரியர்கள்,
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
.காந்தன்,சுரேஸ்விவேக்,
.ஆனந்தன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.