இலுக்குச்சேனை ஜீ.எம்.எம்.எஸ். சுற்றுமதிலுக்கு நிதி ஒதுக்கீடு





 நூருல் ஹுதா உமர்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் அடிக்கடி யானை தாக்குதலை சந்தித்து வரும் சம்மாந்துறை கல்வி வலய வாங்காமம் கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை சுற்று மதில் நிர்மாணிக்க 4.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் யூ.எல். பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுமதில் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நிஷார், வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலய அதிபர் யூ. எல்.தாஹிர், வாங்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஐ.எல். சபின், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், இணைப்பாளர் எம்.எப்.எம். பர்ஹான், அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை முன்னாள் அதிபர் எம். ஹார்தீன்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து போட்டோ கொப்பி இயந்திரம், அலுவலக தளபாடங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.