பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இடை நிறுத்தம்




 


தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஜிபியாக அவர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களின் இறுதித் தீர்மானம் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 9 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக ரொமேஷ் டி சில்வா ஆஜரானார். அட்டர்னி ஜெனரல் சார்பில் மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே ஆஜரானார்.