அம்பாரையில் 500 இற்கும் மேற்பட்டோர் ஐக்கிய மக்கள் சக்தியின் நிரந்தர அங்கத்தவர்களாக சத்திய பிரமாணம்




 


(சுகிர்தகுமார்)


 மாற்றத்திற்கான ஆரம்பம், சவால்களை எதிர்கொள்ள தயார் எனும்  தொனிப் பொருளின் கீழ் ஏனைய கட்சியினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் பகிரங்கமாக இணைக்கும் செயற்பாடானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அம்பாறை நகர சபை கேட்போர் கூடத்தில் (01) இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட ஐக்கிய இளைஞர் சக்தியின் செயலாளரும், ஐக்கிய கல்வி அபிவிருத்தி குழுவில் இணைப்புச் செயலாளருமான வெள்ளையன் வினோகாந்த்  தலைமையில், தமன பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெணூர பிரகித், மற்றும் உகன பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திரகுமார ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் துணை பொதுச்செயலாளரும், குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ திரு. அசோகா அபே சிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபையின் சபாநாயகருமாகிய சந்திரதாச கலப்பத்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
மாற்றத்திற்கான ஆரம்பம் எனும் தலைப்பிற்கு ஏற்ப பொதுஜனபெரமுன கட்சியின் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் மாநகர சபை, பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றின் முன்னாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உட்பட மாற்றுக் கட்சிகளின் அடிப்படை அங்கத்தவர்கள்  500 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நிரந்தர அங்கத்தவர்களாக சத்திய பிரமாணம் செய்து இணைந்து கொண்டனர்.

மக்கள் சக்தியில் இணைந்து இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய பலம் சேர்த்துள்ளது என்பதுடன் அம்பாறை மாவட்டத்தின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதே சந்தர்ப்பத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து எமது கட்சியுடன் இணையக்கூடிய ஒவ்வொருவருடைய எதிர்கால பொறுப்புகளையும் இக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் நிச்சயமாக ஏற்பேன் என்பதனையும் இன்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இணைய உள்ளனர் உங்கள் மாவட்டத்தை சேர்ந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிய வைத்தியர் திலக் ராஜபக்ஷவும் எம்முடன் இணைந்து பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்க அம்சம் என்பதனையும் தெரிவித்திருந்தார்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியையும் சஜித் பிரேமதாஸ அவர்களையும் வெற்றி வாகை சூட வைப்பதற்கான வேலைத்திட்டங்களில் தீவிரமாக இறங்கும்படி அனைவரையும் அன்பாக வினயமாக கேட்டுக்கொண்டார்.
 இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு. சந்திரதாச கலப்பத்தி அவர்கள் கூறுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி அடைவதை இங்கே கூடி இருக்கும் மக்கள் உறுதி செய்கிறார்கள் என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் வாழக்கூடிய அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளும்படியாகவும் அனைவரையும் அன்பாக வரவேற்று அழைத்திருந்தார்.
இதன்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து வருகை தந்திருந்த தவிசாளர்கள் உப தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றக்கூடிய தலைவர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகவும் அசோகா அபே சிங்க மற்றும் சந்திரதாச களப்பத்தி வெள்ளையன் வினோகாந்த்  மாலை அணிவித்து  வரவேற்றனர்.
 திகாமடுள்ள மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாசவின் வெற்றியானது 100 வீதம் உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உருமாறியுள்ளது எனும் கருத்தும் இங்கு வெளியிடப்பட்டது.