40 வயதை தாண்டிய வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலை என்ன ?





 .(சுகிர்தகுமார் 0777113659)


 அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடகாவியலாளர் சந்திப்பு நேற்று மாலை அக்கரைப்பற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் ஜீவா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் செயலாளர் பஸ்லியா உறுப்பினர்களான ரம்சானா சுஜீவன் ததுசனா ரசீட் முக்சீன் உள்ளிட்டவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது அரசிடம் பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்ததுடன் தேர்தலுக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராட வேண்டிவரும் எனவும் எச்சரித்தனர்.
குறிப்பாக பட்டப்படிப்பனை பூர்த்தி செய்து 40 வயதை தாண்டிய பட்டதாரிகளின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
டிப்ளோமா நிறைவு செய்தவர்களுக்கு உடன் தொழில் வழங்கும் அரசு பல வருடம் கஸ்டப்பட்டு பட்டத்தினை பூர்த்தி செய்யும் பட்டதாரிகளை மறந்தது ஏன் எனவும் கவலை தெரிவித்தனர்.
சுற்று நிருபங்களுக்கமைவாக வெளிநாடு சென்றுள்ள அரச உத்தியோகத்தர்களின் இடத்திற்கு ஏன் தங்களை நியமிக்க முடியாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
மிகவும் கஸ்டத்தின் மத்தியில் பல சுமைகளுடன் பட்டத்தினை பெற்றுக்கொள்ளும் பெண்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
8 9 தரங்களில் கல்வி கற்றவர்களுக்கு தொழில் வழங்கிய அரசு பட்டதாரிகளை கணக்கெடுப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.
ஆகவே பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான தீர்வினை தேர்தலுக்கு முன்னர் பெற்றுக்கொடுக்குமாறும் இதற்கென சிறந்த பொறிமுறையினை நாட்டில் உருவாக்கி பட்டதாரிகளாக தாங்கள் வெளியேறுகின்றபோதே தொழிலொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினர்.  இல்லையேல் பாரிய போராட்டங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் கூறினா