அக்கரைப்பற்றில்,ஆட்டிறைச்சிக்கு ஆட்டையைப் போட்ட, 4 பொலிசாருக்கு இடமாற்றம்






தொழுவத்தில் அறுக்கப்படாமல், வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் தொலைந்து போயிருந்தன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிசாருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதவான் ஏ.சி.றிஸ்வான் விசாரணை நடத்துமாறு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று, உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த குற்றச் செயலுடன் சம்மந்தப்பட்ட 4 பொலிசாருக்கும் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையில் 4 ஆடுகளை உரிய இடத்தில் அறுக்காமல் ஒருவீட்டில் வைத்து அறுத்து உரிக்கும்போது ஒருகடை உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்
குறித்த சந்தேக நபர், அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் தோன்றிய சட்டத்தரணி, தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவம், குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி குளிர்சாதனப் பெட்டியில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர். குறித்த சான்றுப் பொருளை பார்வையிட, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு மாலை 7 மணி அளவில் கௌரவ நீதிபதி சென்ற சென்ற வேளையில், ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி, பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாரக, வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக, ஏலவே கூறிய பொலிசார், திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் அவர்கள், பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு வேண்டியிருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகளை காணவில்லை. இது பற்றி வினவியபோது, ஆட்டிறைச்சியை சில பகுதிகளை, தேடுதலுக்குச் சென்ற பொலிசார், எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

குறித்த ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராகவும் விசாரணை நடத்துமாறு அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகரைப் பணித்திருந்தார்.

இதனடிப்டபடையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும், ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவுருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.