பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சி







 பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார். தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தொழிலாளர் கட்சி தலைவர் கியர் ஸ்டாமர் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்-ஐ பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார். இதையடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பிரிட்டன் அரசர் அதிகாரபூர்வமாக கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டாமர் உரை நிகழ்த்தினார். முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த ரிஷி சூனக்கின் பணிகளையும் அவர் பாராட்டினார்.