அவிசாவளை மூழ்கியது l கொழும்புக்கான போக்குவரத்து முற்றாக தடை l 400MMயை தாண்டி எஹலியகொடயில் கடும் மழை




 


நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது.

இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், இங்கிரிய – ஹல்வத்துர பகுதியில் 348.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, அவிசாவளையின் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.