மரம் நடுகைவிழா




 




( வி.ரி. சகாதேவராஜா)


தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைதீவு கமநல சேவைகள் நிலையத்தில் மரம் நடுகை காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியை திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் விவசாய உதவிப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காரைதீவு பிரதேச விவசாய பெரும்பாக  உத்தியோகத்தர்  பாத்திமா சர்ஜானா  விவசாய போதனாசிரியர் ( மத்தி)பி.பிரதீப் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.