கடமை பொறுப்பேற்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான சிவஞானம் ஜெகராஜன்  இன்று (10) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கரம முன்னிலையில் அவர் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அம்பாரை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையில் கலந்து கொண்டதன் பிற்பாடு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.
இதன்பிற்பாடு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத அனுஸ்டானத்தினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கர அவர்களிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டு கையொப்பமிட்டு கடமையினை ஆரம்பித்தார்.
இதன்போது அரசாங்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் மேலதிக அரசாங்க அதிபருக்கு வாழ்த்தினை கூறியதுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கினர்.
பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந் நியமனத்தை வழங்கி இருக்கின்றது .
2007 இல் இலங்கை நிருவாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சேர்ந்த சிவ.ஜெகராஜன் அவர்கள் காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றயதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி இருந்தார்.
2013 இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு பல மாற்றங்களை ஏற்படுத்தி சிறப்பான பணியாற்றி வந்த அவர் மீண்டும் 2019 இல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்டு
ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட  சிவஞானம் ஜெகராஜன் அவர்களுக்கு அம்பாரை மாவட்டம் மற்றும் ஆலையடிவேம்பு மக்கள் சார்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்