காரைதீவிலிருந்து கௌரவம்





 ( காரைதீவு   சகா)

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இன்று பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான சிவஞானம் ஜெகராஜனுக்கு அவர் பிறந்த காரைதீவிலிருந்து கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

 இப் பதவியேற்பு வைபவம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் நடைபெற்றது.

அவ்வமயம் காரைதீவிலிருந்து அங்கு சென்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய செயலாளர் ரி.சண்முகநாதன் ,சக்தி மீன்பிடி சந்தைப்படுத்தல் சங்கத்தலைவர் கே.கோபால் சமுக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் ஆகியோர் பதவியேற்ற ஜெகராஜனுக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.

காரைதீவுக்கு கிடைத்த அவரது சேவை மேலும் மாவட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.