அருண மற்றும் தருஷிக்கும் முதலிடம்




 


தாய்வான் திறந்த தடகள விளையாட்டு போட்டிகளில், 400 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் முதல் இடத்தினை வென்றுள்ளனர்.

அருண தர்ஷன மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் இந்த போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருண தர்ஷன் 45.82 வினாடிகளிலும், தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 400 மீற்றர் போட்டியை 52.48 வினாடிகளிலும் கடந்து வெற்றி பெற்றனர்.