போதிய நீரின்றி சேதமாகும் விவசாய நெற்கதிர்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 போதிய நீரின்றி சேதமாகும் விவசாய நெற்கதிர் கண்டு கவலை அடைந்துள்ள விவசாயிகள் உரிய அளவு நீரினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
அக்கரைப்பற்று நீத்தையாறு தென் மற்றும் நீத்தையாறு மேல் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் வயல் நிலங்கள் போதிய நீரின்றி சேதமாகும்; நிலை ஏற்படப்போவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
நெற்செய்கையானது குடலைப்பருவத்தை அடைந்து நெற்கதிர் வெளிவரும் நிலையில் இவ்வாறு போதிய அளவு நீருன்றி நிலம் காய்ந்துள்ளதால் விளைச்சல் பாதிப்படையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
பன்னலகம மற்றும் அம்பலோயா குளங்களில் இருந்து நீரினை பாய்ச்சல் மூலமாக பெறும் பயிர் நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
சிறுபோகச் செய்கையின் ஆரம்ப கூட்டத்தில் குறித்த வயல் நிலங்களுக்கு பாய்ச்சல் நீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தும் தற்போது போதிய அளவு நீர் வழங்கப்படாமை தொடர்பில் அதிருப்தி அடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.