சிங்கள மொழிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்




 


சிங்கள மொழிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(எச்.எம்.எம்.பர்ஸான்)


இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்த தமிழ் மொழி அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதில், கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் அடங்களாக ஏனைய அரச நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் 57 பேர் கலந்து கொண்டனர்.


அரச மொழி திணைக்கள போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பன்டார, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன்,  மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஆர்.ஜுனைதீன் மற்றும் அரச மொழி திணைக்களத்தின் வளவாளர்கள் உட்பட முக்கிஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.