அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது




 


மட்டக்களப்பு  தாளங்குடா  பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


 பொத்துவிலில் இருந்து வந்து கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில் வைத்து இன்று அதிகாலை 2.25 மணியளவில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


மேலும் சம்பவம் தெரிய வருகையில் விபத்துக்குள்ளான காரில் மூன்று நபர்கள் வந்து கொண்டிருந்த வேளை சாரதியின் தூக்க கலக்கமே இவ்விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.


வாகன சாரதி சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் பயணியர் ஆதார வைத்திய சாலையிலும்  மற்றும் ஒரு நபர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.