இந்திய அணி, 11 ஆண்டுகள் பஞ்சத்துக்குப்பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது




 

2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.
ஏறக்குறைய 11 ஆண்டுகளாக பலமுறை ஐ.சி.சி போட்டிகளின் பைனல், அரையிறுதிவரை சென்றிருந்த இந்திய அணி, 11 ஆண்டுகள் பஞ்சத்துக்குப்பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பல அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு இந்த உலகக் கோப்பையில் விளையாடிய நிலையில் அனைத்தும் இந்த வெற்றி மூலம் விலகியுள்ளன.

இந்தியாவின் இந்த வெற்றிக்கு, அணியில் இருந்த ப்ளேயிங் லெவன் அனைவருமே காரணம். இருப்பினும் கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அவர் வீசிய கடைசி ஓவர், பும்ராவின் கடைசி இரு ஓவர்கள், அர்ஷ்தீப் வீசிய ஓவர், சூர்யகுமார் பிடித்த கேட்ச் என அனைத்துமே திருப்புமுனையாக அமைந்தன.

கிளாசன் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி உறுதியில்லாததாக இருந்தது. தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 24 பந்துகளில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீச வந்தபின்புதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் கைமாறியது. கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தியதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அதன்பின் பும்ரா வீசிய 18-வது ஓவரில் யான்சென் விக்கெட்டை வீழ்த்தி 2 ரன்கள் கொடுத்து தேவைப்படும் ரன் 12 பந்துகளில் 20 ரன்களாக உயர்ந்தது நெருக்கடி அதிகரித்தது. அர்ஷ்தீப் சிங் 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை நெருக்கடியில் தள்ளினார்.

நெருக்கடி, அழுத்தம் வந்தாலே தென் ஆப்ரிக்கா தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது இந்த ஆட்டத்திலும் வெளியானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச அதை சூர்யகுமார் அருமையான கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் ரபாடாவும் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்கா தோல்விக்குழியில் விழுந்தது.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியா. இதன்மூலம் இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.



இந்திய அணி இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.



டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஒரு கட்டத்தில் பவர்ப்ளே ஓவரில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, கோலி, அக்ஸர் கூட்டணி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.



இந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த 'கிங்' கோலி முதல் அரைசதத்தைப் பதிவு செய்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரின் ஆட்டமும் இந்திய அணி ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.






IND vs SA: டி20 இறுதிப் போட்டிக்கு முன் கேப்டன் ரோகித் சர்மா எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

29 ஜூன் 2024



படக்குறிப்பு,பும்ரா பந்தை சந்தித்த ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்காவிற்கு 177 ரன்கள் என்பது சற்று கடினமான இலக்கு தான். ஓவருக்கு 9 ரன்கள் வீதம் அடித்தால் தான் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.



டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கோலி, ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர்.



யான் சென்வீசிய முதல் ஓவரில் வழக்கத்துக்கு மாறாக கோலி 3 பவுண்டரிகள் அடித்து 15 ரன்களை விளாசி அதிரடி தொடக்கம் அளித்தார். கேசவ் மகராஜ் 2வது ஓவரிலேயே கொண்டு வரப்பட்டார்.



பவர்ப்ளேவில் 3 விக்கெட்

பவர்ப்ளேயில் 3 விக்கெட்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜடேஜாவின் கேட்ச்சைப் பிடிக்கும் கேசவ் மகராஜ்

கேசவ் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளை ரோஹித் அடித்த நிலையில், 4வது பந்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த் டக்-அவுட்டில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் 2 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.



அடுத்து சூர்யகுமார் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். ரபாடா வீசிய 5வது ஓவரின் 3வது பந்தை பைன் லெக் திசையில் தூக்கி அடிக்கவே அங்கிருந்த கிளாசன் கேட்ச் பிடித்தார். ஸ்கை 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ரோஹித் சர்மாவுக்கு கேட்ச் பிடித்திருந்த கிளாசன், சூர்யா விக்கெட்டையும் கேட்ச் பிடித்தார்.



இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அக்ஸர் படேல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது.



டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, உடலைப்பெற நாள் முழுவதும் அலைந்த மகன்

29 ஜூன் 2024

2026இல் விஜய் நாம் தமிழருடன் கூட்டணி அமைக்க திட்டமா? அவரது பேச்சு உணர்த்துவது என்ன?

29 ஜூன் 2024

விராட் கோலியின் அரை சதம்

கோலிபட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி

கோலி, அக்ஸர் படேல் மேலுமேலும் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர். இருப்பினும் மார்க்ரம் ஓவரிலும், மகராஜ் ஓவரிலும் அக்ஸர் படேல் 2 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.



விராட் கோலி நிதானமாக பேட் செய்த 4வது ஓவரில் கடைசியாக பவுண்டரி அடித்தார். அதன்பின் 6 ஓவர்களுக்கு ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது.



விராட் கோலி முதல் 5 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்த 22 பந்துகளில் 24 ரன்கள் என மெதுவாக ஆடினார். பெரும்பாலும் ஸ்ட்ரைக்கை அக்ஸருக்கு வழங்கி, கோலி நிதானமாக பேட் செய்தார்.



இருவரும் மெதுவாக பேட் செய்ததால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது. சம்ஷி வீசிய 12வது ஓவரில் அக்ஸர் படேல் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ரபாடா வீசிய 13வது ஓவரில் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை அக்ஸர் படேல் விளாசியதையடுத்து, இந்திய அணி 100 ரன்களை எட்டியது.



அதே ஓவரில் விராட் கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க அக்ஸரை அழைத்தார். ஆனால், அக்ஸர் ஓடலாமா வேண்டாமா என பாதி பிட்சில் நின்று யோசித்துப் பின்வாங்கினார்.



இதனால் பந்தை ஃபீல்டிங் செய்த டீ காக், ஸ்டெம்பை நோக்கி நேரடியாக எறிந்து அக்ஸரை 47 ரன்னில் ரன் அவுட் செய்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அருமையாக ஆடிய அஸ்கர் 3 ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்டார். 4வது விக்கெட்டுக்கு கோலி, அக்ஸர் கூட்டணி 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 5வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். யான் சென் வீசிய 15வது ஓவரில் துபே சிக்ஸர் விளாசினார்.



சம்ஷி வீசிய 16வது ஓவரில் துபே ஒரு பவுண்டரி விளாச 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஓவரிலும் இந்திய அணி பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து வந்ததால் ரன்ரேட் குறையாமல் சென்றது.



விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக்கோப்பையில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த உலகக்கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் அடித்தது சிறப்பானது, தேவையான நேரத்தில் அடிக்கப்பட்டது.



இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர்

இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர்பட மூலாதாரம்,GETTY IMAGES

ரபாடா வீசிய 18வது ஓவரில் கோலி லாங் ஆனில் ஒரு சிக்ஸரும், ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரியும் விளாசி இந்த ஓவரில் 16 ரன்களை சேர்த்தனர். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய நிலையில் அடுத்த 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது இந்திய அணி.



யான்சென் 19வது ஓவரை வீசினார். யான்சென் வீசிய 2வது பந்தில் பிளிக் ஷாட்டில் கோலி பவுண்டரியும், 4வது பந்தில் அவுட்சைட் ஆப்சைடில் ஒரு சிக்ஸரை கோலி விளாசினார். 5வது பந்தில் கோலி ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 59 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 128 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 5வது விக்கெட்டுக்கு துபே - கோலி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.



இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரை நோர்க்கியா வீசினார். நோர்க்கியா வீசிய 3வது பந்தில் துபே மிட்ஆனில் பவுண்டரி விளாசினார். ஆனால், அடுத்த பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து துபே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.



கடைசிப் பந்தில் தூக்கி அடிக்க முயன்ற ஜடேஜா 2 ரன்னில் கேசவ் மகராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது.



இருபஇருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தென் ஆப்ரிக்கா தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



பும்ராவுக்கு முதல் விக்கெட்

தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளிலும் திணறிய டீ காக் லெக்பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து, ஹென்ட்ரிக்ஸிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார்.



பும்ரா பந்தை சந்தித்த ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினர். பும்ரா பந்தை இன்னர்கட் மூலம் வீசி, லேசான அவுட்ஸ்விங்கில் வெளியேற்றி க்ளீன் போல்டாக்கினார்.



பிறகு, அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.



தென் ஆப்பிரிக்க ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பேட் செய்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஃபுல்டாஸாக வந்த பந்தை ஸ்வீப்ஷாட் அடிக்க முற்பட்டு ஸ்டெப்ஸ் ஆட்டமிழந்தார். ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசியிருந்தார்.



அர்ஷ்தீப் சிங் வீசிய 13வது ஓவரில் டீகாக் பவுண்டரி விளாசினர். அதே ஓவரின் 3வது பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த ஷாட்டை குல்தீப் கேட்ச் பிடிக்கவே டீ காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.



IND vs SA: நிறவெறித் தடை, அவப்பெயர், கேலிப்பேச்சு - தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை

3 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழிதீர்த்த இந்தியா - மீண்டும் ஏமாற்றிய கோலி பற்றி ரோகித் கூறியது என்ன?

28 ஜூன் 2024

டாஸ் ஏன் முக்கியம்?

டாஸ் வென்ற இந்திய அணிபட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்ந்தெடுத்தது. பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ளன, இது 9வது ஆட்டம்.



இந்த மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை குறித்துத் தெரியும். ஆனால், தென் ஆப்பிரிக்கா விளையாடியதில்லை.



இந்த மைதானத்தின் விக்கெட்டில் நடந்த 7 போட்டிகளில் 3இல் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.



இந்திய அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்துள்ளது. இதில் 4 முறை எதிரணியே இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது.



தென் ஆப்பிரிக்க அணி 3 முறை டாஸ் வென்று அதில் இருமுறை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுமே பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து பந்துவீச்சில் சுருட்டவே விரும்பும்.