இலவச கணினி கல்வி மையம் திறந்து வைப்பு





 ஓட்டமாவடியில் இன்று (20) DP Education IT Campus உத்தியேக பூர்வமாக அல்-கிம்மா காரியாலய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அல்-கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஓட்டமாவடி DP education IT campus ன் இணைப்பாளருமான மெளலவி அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக DP Education நிறுவனத்தின் தவிசாளரும், இலங்கையின் பிரபல வர்த்தகரும் முன்னாள் அமைச்சருமான தம்மிக்க பெரேரா கலந்து சிறப்பித்தார்.
கெளரவ அதிதிகளாக ICST பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான், அகீல் எமேர்ஜன்ஷி அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் நியாஸ்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கணினி துறையில் (Computer Cording) அசாதாரன திறமையுடைய (Extraordinary Knowledge) ஓட்டமாவடி, மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் அப்Fனான் அஹமட் எனும் மாணவனை பாராட்டி பிரதம அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.