ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்; பிரதேச செயலாளராக ஆர்.திரவியராஜ்





வி.சுகிர்தகுமார் 0777113659   


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்; பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரி ஆர்.திரவியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (9) கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய த.கஜேந்திரன்; இன்று கடமையினை கையளித்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய ஆர்.திரவியராஜ்; ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
இதன் பின்னராக கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அவரது தாயாரிடம் ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இதேநேரம் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளருக்கு முன்னாள் பதில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன்; உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சமய தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.
இதன் பின்னராக பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலிலும் தனது குடும்ப சகிதம் பங்கேற்றுக்கொண்ட அவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இறுதியாக பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.
இவர் வெல்லாவெளி மற்றும் நிந்தவூர் அம்பாரை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன் பொத்துவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக கடமையாற்றிய நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.