விளையாட்டு விழா





 ( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார்  குருகுல அறநெறி பாட சாலைகளில் ஒன்றான திருக்கோவில், விநாயகபுரம் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலை பிள்ளைகளின் பாரம்பரிய கலை, கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வு 
 திருக்கோவில் உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ கணேசா அறநெறி பாடசாலை நாடாத்திய இச் சித்திரை விளையாட்டு போட்டி நிகழ்வு சுவாமி விபுலா னந்தர்  நூற்றாண்டு நினைவாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் ( கண்ணன்)  மற்றும் திருக்கோவில் கோட்ட கல்விப்பணிப்பாளர் சோ,ரவீந்திரன்,ஆசிரியர்களான ஜனா , தர்மசீலன் மற்றும் அறநெறி ஆசிரியர்கள், பெற்றோர்கள்   ஆகியோர் கலந்து கொண்டனர்.