பாதயாத்திரை குழுவினர்,நாளை திருமலையை அடைவர்





 (  வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நேற்று  கும்புறுப்பிட்டியை வந்தடைந்தார்கள்.


இன்று(29) புதன்கிழமை கோபாலபுரத்தில் தரித்து நிலாவெளி யில் தங்குவார்கள். அங்கு கோபாலபுரத்தை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி மகேஸ்வரன் அனுசரணை வழங்கவுள்ளார்.

நாளை (30) திருகோணமலை நகரை வந்தடைவார்கள்
 
 கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த பாதயாத்திரை நேற்று 18-வது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

 கதிர்காம பாதயாத்திரை பேரவையின் தலைவர்  ஜெயாவேல்சாமி தலைமையில் இந்த குழுவினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

மொத்தமாக 124 அடியார்கள் இந்த பாதயாத்திரை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.