திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு




 


( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

 திருக்கோவில் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏபி. மசூத் தலைமையில் இடம் பெற்றது.

 இந்தக் கூட்டத்தில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தார்.

(ECG mechine, portable ventilator, BP monitor, pulse oxymetry)
போன்ற உபகரணங்கள்  வழங்கப்பட்டன.

அச்சமயம் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.