பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி




 


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி நிகழ்வு-2024

........................................................


எமது கல்லூரியின் இணைப்பாடவிதான அபிவிருத்தி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக கடந்த 28/04/2024 அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகாவித்தியாலத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி நிகழ்வின்  அக்கரைப்பற்று வலய  பாடசாலைகளுக்கிடையிலான முதல் கட்ட நிகழ்வில் எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 

பின்வரும் நிலைகளை பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.என்பதுடன் மாகாண மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டனர்.


1.H.அப்துல் வதூத்-கிராஅத் (கனிஷ்ட பிரிவு) முதலாம் இடம்

2.S.இமாம் அஹமட்-கிராஅத் (சிரேஷ்ட பிரிவு) முதலாம் இடம்

3.MA.அன்சாப்-கிராஅத் (இடைநிலைப் பிரிவு)

மூன்றாம் இடம்

4.MM.ராசிம்-அதான் கூறுதல் (இடைநிலைப் பிரிவு).முதலாம் இடம்

5.L.முஹன்னத்-அதான் கூறுதல் (சிரேஸ்ட பிரிவு) இரண்டாம் இடம்

6.R.பாத்திமா ரஸா -நஸீத் (சிரேஸ்ட பிரிவு)

இரண்டாம் இடம்

7.AG.பிஸ்மி ஸஹா-அஸ்மாஉல் ஹுஸ்னா (சிரேஸ்ட பிரிவு) மூன்றாம் இடம்


இதற்கிணங்க இம்மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக பயிற்றுவித்த எமது பாடசாலை இஸ்லாம் பாட ஆசிரியர்களான அஷ்ஷேக் HM.சிப்னாஸ் (இணைப்பாளர்) ,அஷ்ஷேக் ANM.ஜுனைட்,,I.ஸிப்கா ஆசிரியை குறிப்பாக இம்மாணவர்களை பயிற்றுவிப்பதில் இரவு பகலாக தன்னை அர்ப்பணித்த இஸ்லாம் பாட ஆசிரியர் அஷ்ஷேக் NM.நிஷாத் ஆகியோருக்கும் மேலதிகமாக பல்வேறு உதவிகளை புரிந்த பிரதி அதிபர்

AL.நஸீபா(SLPS) ,ALM.இல்யாஸ் ஆசிரியர் அவர்களுக்கும் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும் அதிபர் AH.பௌஸ் (SLEAS) அவர்கள் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்.


தகவல்-

NM.முஹமட் ஸாலிஹ் (SLPS)

பிரதி அதிபர்

இணைப்பாடவிதானம்

அக்/முஸ்லிம் மத்திய கல்லூரி 

(தேசிய பாடசாலை)