போக்குவரத்து வழமைக்கு திரும்பியது




 


இன்று காலை முதல் பதுளை – கொழும்பு பிரதான வீதியில் தியத்தலாவை – ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மரங்கள் வீதியில் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.

பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள், தியத்தலாவ பொலிஸார், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து குறித்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பல மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.