" மக்கள் மேடை" மே 29 இல் !





 அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சத்தியநாதன் ஏற்பாடு 

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் "மக்கள் மேடை" நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது.

 தூய்மையான அரசியலுக்காக செயல்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில் இந் நிகழ்வு காரைதீவு பாபா றோயல்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கென மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்
 . கிராம ரீதியாக மூவர் இந் நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கிறது.

நாம் எமது வாக்குகளை அறிவு பூர்வமாக பயன்படுத்த வேண்டும். தகுதியானவர்களை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இதுவே எமது தலையான கடமையாகும் என்று
மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.

இணைப்பாளர் சத்தியநாதன் மேலும் தெரிவிக்கையில்..

 எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சகல தேர்தல் அதிகாரங்களும் தேர்தல் ஆணையகத்திடம் செல்கின்றன.அதன் பின்பு பாராளுமன்றமோ அல்லது ஜனாதிபதியோ தேர்தலில் தலையிடும் அதிகாரம் இருக்காது.எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் வைத்தே ஆக வேண்டும். எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.

நிதியின்மை போன்ற காரணங்களை காட்டி உள்ளூராட்சி  தேர்தல் பின்போடப்பட்டது. இருந்தபோதிலும் எதிர்வரும் அக்டோபரில் தேர்தல் நடத்தியாக வேண்டும் . 

மார்ச் 12 இயக்கத்தின் குறிக்கோளின் படி எட்டு தகுதிகள் ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் வேட்பாளருக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அந்த எட்டு தகுதிகளும் இருக்கின்றவர்களுக்கு தான் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிஅளிக்க வேண்டும். கட்சிகளும் அனுமதி அளிக்க வேண்டும்.
தரமான பிரதிநிதியை தெரிவு செய்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் எடுக்கின்ற முடிவு அடிப்படையில் நாட்டின் கிராமத்தின் மற்றும் உங்களது நகரத்தின் எதிர்காலமும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலமும் தங்கி உள்ளது . என்றார்