விழிப்பாக இருப்போம்!




 


அம்பாறை மாவட்டம் மற்றும் அதனை அண்மித்த கரையோர பிரதேசங்களுக்கு விடப்படும் எச்சரிக்கை


அம்பாரை மாவட்டத்திலுள்ள சேனாநயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதன் அடிப்படையில் நீர்ப்பாசன திணைக்களமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி குளத்தின் நீர்மட்டத்தினை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது குளத்தின் நீர்மட்டம் :- 105.10 அடி /110


நீர்மட்டம் குறைக்கப்படும் அளவு : 05 வான்கதவுகளின் ஊடாக 2.5 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.


திறக்கப்படவுள்ள நேரம் :- 2024.01.08 மு.ப.10:30 மணி


ஆபத்தான பிரதேசங்கள் :-


அம்பாரை பிரதேச செயலகப் பிரிவின் பொல்வத்த, பகலலந்த மற்றும் இறக்காமம், அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவுர், சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் ஆபத்தானவை.


எனவே பிரதான கால்வாய்கள் ஆறுகள் மற்றும் தாழ்நில பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.


தகவல் - நீர்ப்பாசன திணைக்களம், அம்பாரை.