வேற்றுச்சேனையில், சிறிய சூறாவளி





 மட்டக்களப்பில் மினி சூறாவளி - வீடுகளின் கூரைத் கழன்று பறந்துள்ளது  -


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனையில் இன்று (27) புதன்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. 


மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளின் கூரைத் தகடுகள், சீற்கள் மற்றும் ஓடுகள் சில கழன்று பறந்துள்ளன. 


அதே நேரம் அருகிலிருந்த சிறிய மரங்கள், மதில்களும் உடைந்துள்ளன. இதனால் அப் பிரதேசத்திலுள்ள சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


தமிழ் தேசிய கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் .நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார்.