மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு





 நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள மூத்த ஆலிம்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் அல்-முப்தி ஏ.எல்.எம். முர்ஷித் (ஸஃதி, நஜ்மி) தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தில் நேற்று (08) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிகம பாரி அரபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி)கலந்து கொண்டார். இதன் போது நீண்ட காலமாக ஆலிம்களாக கடமையாற்றிய மூத்த ஆலிம்களான,
அஷ்ஷெய்க்.எம்.எல்.முஹம்மத் சுல்தான் (கபூரி), அஷ்-ஷெய்க் இஸட் முஹம்மத் நதீர் (ஷர்க்கி), அஷ்-ஷெய்க் எம்.ஐ.முஹம்மத் ரபீக், அஷ்-ஷெய்க் எஸ்.எம்.முஹம்மத் ஆரிப் (நத்வி), அஷ்-ஷெய்க் எம்.எம். உதுமாலெப்பை (நூரி), அஷ்-ஷெய்க் யூ.எல். சாகுல் ஹமீத் (ஹாமி), அஷ்-ஷெய்க் ஏ.எம்.முபாறக் அப்துல் மஜீட் (கபூரி,மதனி), அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். இக்பால் (ஹாமி), அஷ்ஷெய்க் எஸ்.எச். குதுபுத்தீன் (ஹாமி), அஷ்-ஷெய்க் கே.எம்.ஹாறூன் (சலபி), அஷ்-ஷெய்க்.பி.எம்.நிஸாம் 
(ஹாஷிமி), அஷ்-ஷெய்க் எம்.சி. அப்துஸ் ஸமட் (தப்லீகி), அஷ்-ஷெய்க்.ரி.ரிபானுத்தீன் (பலாஹி), அஷ்-ஷெய்க்.ஐ.எல்.வலியுல்லாஹ் (ஹாமி), அஷ்-ஷெய்க்.ஐ.எல்.நசீர் அஹமட் (நிழாமி) ஆகியோர் நினைவு சின்னம் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.