எரிபொருள் விலையில் திருத்தம்




 


இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சுப்பர் டீசல்  ஒரு லீட்டரின் விலை 03 ரூபாவால் அதிகாரிக்கப்பட்டுள்ளதுடன்,  ஒக்டேன் 92 ரக  பெட்ரோலின்  லீட்டரின் விலை 10 ரூபாவாலும், டீசல் ஒரு லீட்டரின் விலை 27 ரூபாவாலும், மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 02 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, 


ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 356 ரூபா.


டீசல் ஒரு லீட்டர் விலை 329 ரூபா.


சுப்பர் டீசல் ஒரு லீட்டர் புதிய விலை 434 ரூபா.


மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 247 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.