கையளிப்பு




 


நூருல் ஹுதா உமர்


உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு நிதி பெறப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான இரண்டு மாடிக்கட்டிடம் நேற்று 2023.11.04 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது 

அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேடமாக முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் ஜீ. சுகுணன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்

இந்நிகழ்வில் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் சீ எம் மாஹிர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

பாரபட்சமின்றி முக்கிய சேவைகளை வழங்கி வரும் பணிமனையின் குழாத்தினரை அன்னமலை பிரதேச வைத்தி சாலையின் அபிவிருத்தி குழுவினரும் ஆலயத்தின் பிரதிநிதிகளும் ஊர் மக்களும் திரண்டு பிரம்மாண்டமான இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி கௌரவித்தவுடன் நிகழ்வின் இறுதியாக மரங்களும் நட்டு வைக்கப்பட்டன