தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு ..!




 


(எம்.என்.எம்.அப்ராஸ்) 



பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலி கான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இரண்டாவது தடவையாக (06)கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.


 குறித்த இந்நிகழ்வானது கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேவையுடைய பொது மக்களின் வாழ்வாதார உதவியின் அங்கமாக குறித்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதன் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார வசிப்பிடங்களை பார்வையிட்டு அவர்களது தேவைப்பாடுகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். 


தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், அம்பாறை மாவட்டத்துக்கு நான் இன்று விஜயம் மேற்கொள்வது இரண்டாவது தடவையாகும் அம்பாறை மாவட்டத்துக்கு நான் முதன்முதலாக மூன்று மாதங்களுக்கு முன்னர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பெயரில் வருகை தந்து பொது மக்களை பார்வையிட்டு ரஹ்மத் மன்சூரின் சேவையில் தான் மிகவும் சந்தோஷமும்,திருப்தியும் அடைந்ததாகவும், அதன் பிரகாரமே இன்று(06)இரண்டாவது விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். 


 மேலும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அடையாளப்படுத்துகின்ற பயனாளர்களுக்கு தேவையான அனைத்துவித உதவிகளையும் அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் செய்யவிருப்ப தாகவும் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.


 2.5 மில்லியன் பெறுதியான நீர்வசதிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் உயர்ஸதானிகரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 


இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள்,
பயனாளர்கள்,நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.