மனம்பிட்டி,2 #கிழக்கு #பல்கலைக்கழக #மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்





 மனம்பிட்டி விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 2 #கிழக்கு #பல்கலைக்கழக #மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் 


பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி  ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து தொடர்பில் பஸ் மீட்கப்பட்ட பின்னரும் இன்று  காலையும் கடற்படையினர், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணியை முன்னெடுத்துள்ளனர். 

  

இந்த விபத்தில்  இன்று காலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக  தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களும் உள்ளடங்கின்றனர்


 உயிரிழந்தவர்களில் 9 பேரின் சடலங்கள் பொன்னறுவை வைத்தியசாலையிலும், 


மற்றைய சடலம் மன்னம்பிட்டி வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


(ஏறாவூர் 2 ஒலிவில் 1 )


மேலும், குறித்த விபத்து தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.


  சாரதியின் பாதுகாப்பற்ற வாகனம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பற்ற பாலமாக இருந்த இந்த பாலத்தில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.