வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும்





 அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின்  வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும்.


நூருல் ஹுதா உமர்.


அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின்  வருடாந்த பொதுச்சபை கூட்டமும் நிர்வாகிகள் தெரிவும் இன்று (25) கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி மண்டபத்தில் அமைப்பின் பதில் தலைவர் எம். ஏ. பர்ஸான் தலைமையில் இடம்பெற்றது.


இச்சங்கத்தின் மத்தியஸ்தர்களாகவிருந்து மரணித்த மத்தியஸ்தர்களுக்கு துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன் இதன்போது பிராந்திய உதைப்பந்து மேம்பாடு, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள்சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள், மத்தியஸ்தர்கள் கௌரவிப்பு மற்றும் Eastern F7 & F11உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்துதல்  உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.


இதனை தொடர்ந்து 2023/2025 நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக  சபை தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் போஷகர்களாக  சிரேஸ்ட மத்தியஸ்தர்களான அல்ஹாஜ். எம்.ஏ. நபார், அல்ஹாஜ். எம்.ஐ.எம். அமீரலி ஆகியோரும், ஆலோசகர்களாக ஏ. எம்.எம். இப்ராஹிம், ஏ.எம். இப்ராஹிம், ஏ.எல்.ஏ. கனி, யூ.எல்.எம். ஹனீபா  ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் தலைவராக எம்.எல்.எம். ஜமால்தீன், தவிசாளராக எம்.எல்.ஏ. தாஹீர், செயலாளராக அலியார் பைஸர், பொருளாளராக, எஸ்.எல்.வை. அரபாத், உப தலைவர்களாக எம்.ஏ. பர்ஸான், ஏ.எம். றிஷாத், எஸ்.எம். உபைத்தீன், உப செயலாளராக ஏ.எம். ஜப்றான், உப பொருளாளராக ஜே.ஏ. மஜித், கணக்கு பரிசோதகர்களாக எம். எம். றஜீப், ஐ. அஸ்பாக் ஆகியோர் சபையால் தெரிவு செய்யப்பட்டனர்.