அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவ கொடியேற்றம்




 


.சுகிர்தகுமார் 0777113659 


 அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான கொடியேற்றம் இன்று(24) இடம்பெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் கர்மாரம்ப கிரியைகள் நேற்று ஆரம்பமானது.
இன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்;சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சகிதம் கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.
கொடிக்தம்பம் அருகே இடம்பெற்ற பூஜைகளின்; பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதேநேரம் ஆலய நிருவாக சபை திருப்பணிச்சபை மகளிர் அணி ஆகியோர் இணைந்து அன்னதானம் வழங்கும் பணியை முன்னெடுத்ததுடன் இப்பணியை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு முன்னின்று செயற்படுத்தினர்.
நேற்று 23ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி 24ஆம் திகதி இன்று 24ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் ஆடி மாதம் 01ஆம் திகதிவரை இடம்பெறும் திருவிழாக்கள்  02ஆம் திகதி இடம்பெறும் பாற்குடபவனி 03ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் 04 ஆம் திகதி இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 05ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடனும்; நிறைவுறும்.
ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவத்தின் வழிபாட்டுக்கிரியைகள் யாவற்றையும் அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் மற்றும் சொற்பொழிவு வேந்தன் அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ குமார பிரபாகர குருக்கள் ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.