தோனியின் வியூகம்




 


சேப்பாக்கத்தில் சென்னை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்று கருதப்பட்ட சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர் என ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார் தோனி. அவர்களும் ஏதோ தோனி எழுதிய ஸ்கிரிப்டுக்கு அடிப்பதைப் போல ஆடி, துல்லியமாக ஆட்டமிழந்து சென்றார்கள்.

ஒவ்வொரு குஜராத் வீரரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு தோனி செய்திருந்த ஃபீல்டிங் வியூகம் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை வர்ணனையாளர்கள் புகழ்ந்து கூறினார்கள். அது போன்ற வியூகம் வகுப்பதில் தவறியதால்தான் குஜராத் அணி பல வாய்ப்புகளைத் தவறவிட்டதையும் காண முடிந்தது.

குஜராத் அணியில் இதுவரை சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டுக் கொண்டிருந்த பல வீரர்கள் சேப்பாக்கத்தில் தோனியின் கண்முன்னே வருவதும் போவதுமாகத்தான் இருந்தார்கள். பார்ப்பதற்கு ஏதோ அவர்கள் தோனியின் பேச்சுக்கு ஆடுவது போலத் தெரிந்தது.

குஜராத் அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் கோப்பையை முடிவு செய்யும் இறுதிப் போட்டிக்கு 10-வது முறையாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

இதுவரை 14 ஐபிஎல் சீசன் நடந்துள்ளதில் அதில் 10-வது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இந்த சாதனையை இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் செய்தது இல்லை என்பதால் சிஎஸ்கே புதிய வரலாறு படைத்துள்ளது.

சிஎஸ்கே என்றால் “கம்-பேக்” கிங்ஸ்

இந்த சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூட ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி என பல்வேறு அணிகளை பைனலுக்கு கணித்தனர்.

ஆனால், சிஎஸ்கே அணியில் இருக்கும் ஜூனியர் வீரர்கள், சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு தோனி எவ்வாறு பைனலுக்கு அணியை அழைத்துச் செல்லப்போகிறார் என்ற கடுமையான விமர்சனம் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அனைத்து விமர்சனங்களையும், கேலிப் பேச்சுகளையும், தவிடுபொடியாக்கி, 2023 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

கடந்த சீசனில் 9-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி கேப்டன்ஷி விஷயத்தில் பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளதாக பேசப்பட்டது. ஆனால் பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் மிகப்பெரிய “கம்பேக்” சிஎஸ்கே அணி கொடுத்திருக்கிறது.

இதேபோல 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, 2021ம் ஆண்டில் பெரிய கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. ஒட்டுமொத்தத்தில் “சென்னை சூப்பர் கிங்ஸ்” அல்ல, “சென்னை கம்பேக் கிங்ஸ்” என்றார்கள் வர்ணனையாளர்கள்.

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அப்படியொரு துல்லியமான பீல்டிங் வியூகத்தை சென்னையில் காண முடிந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சாதனை படைத்து பைனலுக்குச் செல்லும் சிஎஸ்கே

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் இருந்து முதல் ஆளாக டுவைன் பிராவோதான் ஓடிச் சென்றுவீரர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் செல்வதைக் கொண்டாடும் வகையில் மைதானத்தில் பல்வேறு வண்ண வானவேடிக்கைகளையும், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வெற்றி கொண்டாடப்பட்டது.

2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021, இப்போது 2023ம் ஆண்டில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் பைனலிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் சென்றது, 2023ம் ஆண்டில் நடக்கும் இறுதிப்போட்டியிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் நுழைகிறது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆமதாபாத்துக்கு டிக்கெட் போடுங்க!

வரும் 28-ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாட உள்ளது. நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, குஜராத் டைட்டன்ஸுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணியே, சிஎஸ்கேயுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

குஜராத் அணியுடன் இதுவரை 3 முறை மோதியும், அதில் தோல்வியைச் சந்தித்துவந்த சிஎஸ்கே அணி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங்கில் திணறியதா சென்னை?

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ருதுராஜ் கெய்க்வாட்(60ரன்கள்) கான்வே(40) ஆகியோர் சேர்த்த ஸ்கோர்தான் திருப்புமுனையாகும். முக்கிய தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் ஆட்டநாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெய்க்வாட் தொடக்கத்தில் ஆட்டமிழந்தபோது அதுநோபாலாக அறிவிக்கப்பட்டதால் மிகப்பெரிய ஸ்கோரை சிஎஸ்கே எட்டியது, இல்லாவிட்டால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.

அதேபோல பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா, தீக்சனா இருவரும் 8 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, குஜராத் டைட்டன்ஸ் சரிவுக்கு முக்கியப் பங்காற்றினர்.

அதிலும் ஜடேஜா வீழ்த்திய சனகா, டேவிட் மில்லர்விக்கெட்டுகளும், தீக்சனா வீழ்த்திய, ஹர்திக் பாண்டியா, திவேட்டியா விக்கெட்டுகளும் திருப்புமுனையாகும்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கேவுக்கு சாதகமானவை என்ன?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பனிப்பொழிவைக் காரணம் காட்டி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், சேப்பாக்கம் ஆடுகளத்தில் நினைத்தது போல், பனிப்பொழிவு பெரிதாக இல்லை. பனிப்பொழிவு இருந்தால் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டிருப்பார்கள், அது குஜராத்துக்கு சாதகமாக இருந்திருக்கும்.

ஆனால், பனிப்பொழிவு இல்லாதது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பனிப்பொழிவு இல்லாவிட்டால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாகிவிடும். பந்து மிகவும் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும்போது, ஷாட்களை அடிப்பது கடினமாகிவிடும். அந்தநிலையைத்தான் இன்று குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் அனுபவித்தனர்.

சிஎஸ்கே அணியில் கெய்க்வாட், கான்வே தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேன்களும் ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய கேமியோவுடன் சென்றதால், ஸ்கோர் 172 ரன்கள் மிக அனாசயமாக வந்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம்.

தகுதிச் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தனது சொந்த மைதானத்தில் நடந்தது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகம். குறிப்பாக ரசிகர்களின் ஆதரவு, வரவேற்பு, உற்சாகப்படுத்துதல் ஆகியவை சிஎஸ்கே வீரர்களுக்கு தார்மீக ரீதியாகவே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கியது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கோட்டை விட்ட குஜராத்- தவறுகள் என்னென்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்களின் தோல்வி்தான். மிகவும் முக்கியமான ஆட்டத்தில்கூட விருதிமான் சாஹா விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தது, அடுத்துவரும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தைத் தரும் என்பதை உணரவில்லை. தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்திருந்தால், நடுவரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பதற்றமின்றி, ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் விளையாடுவார்கள்.

ஆனால், தொடக்க வீரர் சொதப்பும் பட்சத்தில் அதன் சுமை அடுத்துவரும் வீரர்கள் மீதே கடத்தப்படும். குஜராத் அணியில் ஆழமான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும் கூட சேப்பாக்கம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகஇருக்கும், பந்துகள் மெதுவாக வரும் ஆடுகளத்தில் கணித்து ஆடாமல் கோட்டைவிட்டனர்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என குஜராத் பேட்ஸ்மேன்கள் நம்பியதற்கு மாறாக செயல்பட்டது. குஜராத் பேட்ஸ்மேன்கள் தங்கள் விருப்பம் போல் ஸ்வீப் ஷாட், ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை ஆட முடியாத அளவுக்கு பந்து ஆடுகளத்தில் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வந்தது. இதனால்தான் விக்கெட்டுகளை விரைவாக குஜராத் பேட்ஸ்மேன்கள் இழந்தனர்.

எந்த வீரர்களுக்கு இடையேயும் பெரிதாக பார்ட்னர்ஷிப் ஏதும் அமைக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கில்-விஜய் சங்கர் கூட்டணி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்தநிலையில் இந்த ஆட்டத்தில் சொதப்பினர்.

இரு சதங்களை அடித்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த சுப்மான் கில் பந்தைக்கணித்து ஆடத் தவறியதால்தான் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மான் கில் களத்தில் கடைசி வரை இருந்தால் ஆட்டத்தை வென்று கொடுத்துவிடுவார் என்று எண்ணிய தோனி, தீக்சனா மூலம் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. தீக்சனா பந்தில் கில் ஆட்டமிழக்காமல், கவனமாக ஆடி தப்பித்தார். இதையடுத்து, தோனி தனது பி பிளானை செயல்படுத்தவே அந்த வலையில் கில் சிக்கினார்.

தீபக் சாஹருக்கு கடைசி ஓவராக இருந்தநிலையில் அதை பொறுமையாக ஆடி கில் கடந்திருக்கலாம் அதைவிடுத்து டீப் ஸ்குயர் லெக்கில் தூக்கி அடித்து கான்வேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை இழந்தார். ஒருவேளை கில் கடைசி வரை களத்தில் இருந்திருந்தால், தோல்விக்கான 15 ரன்களை நிச்சயம் அடித்துக் கொடுத்திருப்பார்.

சீராக விக்கெட்டுகளை இழந்ததும், குஜராத் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். தொடக்கத்தில் 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 72 ரன்களில் இருந்து, 98 ரன்களுக்கு இடையே மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது தோல்விக்கு முக்கியக் காரணம். அதிலும் 7வது ஓவர் முதல் 15வது ஓவர்கள்வரை 51 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கில், ரஷித்கான் போராட்டம் ஏன் நீடிக்கவில்லை?

குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில்(40), ரஷித் கான்(30) ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில்நிலவிய அழுதத்தைத் தாங்க முடியாமல், ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடனே ஆப்சைடில் அந்த ஷாட்டை அடித்தார். ஜடேஜாவுக்கு கேட்ச் பயிற்சி அளித்தார்போல் எந்த சிரமமும் இன்றி பாண்டியா அடித்த பந்து அவரின் கைகளில் அமர்ந்து கொண்டது.

ஜடேஜா வீசும் பந்துகள் பெரும்பாலும் டர்ன் ஆகாமல் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் செல்லும். ஆனால் மில்லரை ஆட்டமிழக்கச் செய்த ஜடேஜா வீசிய பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. ஜடேஜா வீசும் பந்து டர்ன் ஆகினாலே , ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

மற்றவகையில் விஜய் சங்கர்(14), திவேட்டியா(3), சனகா (17) என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில்தான் பேட் செய்தனர். 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி, அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சுப்மான் கில் ஆட்டமிழந்தபின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் சிஎஸ்கே எடுத்துக்கொண்டுவிட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியாக ஸ்கெட்ச் போட்டு பந்துவீசி விக்கெட்டை சாய்த்தனர். அதிலும் நீல்கண்டேவை ரன் அவுட் செய்த சேனாபதி, கில்லுக்கு சொல்லிவைத்தார்போல் பந்துவீசி டீப் ஸ்குயர் லெக்கில் கான்வே பிடித்த கேட்ச், ரஷித் கானுக்கு கான்வே பிடித்த கேட்ச் ஆகியவை தோனியின் கேப்டன்ஷி ஸ்கெட்சுக்கு உதாரணங்கள்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி போட்டியா, தோனி ஓய்வா?

சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் “ ஐபிஎல் மிகப்பெரியது, இது மற்றொரு இறுதி ஆட்டம் என்று கூற முடியாது. 10 அணிகள் பங்கேற்றதால் போட்டிகள் கடினமாக இருந்தன.கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம், எங்களின் வீரர்களின் சிறப்பு தன்மைகள் வெளிப்பட்டன. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்துள்ளனர். இந்த சீசன் முழுமைக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகள் பெரும்பகுதி கிடைக்கவில்லை.

ஆட்டம் 30 நிமிடங்களில் எங்கள் பக்கம் திரும்பியது. சேப்பாக்கம் ஆடுகளம் இதுபோன்று இருந்தால் ஜடேஜா பந்துவீச்சை ஆடுவது கடினம். நாங்கள் அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க முயல்கிறோம், வேகப்பந்துவீச்சாளர்கள் பலத்தை குறித்து அடிக்கடி உணர்த்துகிறோம், அவர்களின் திறமையை மேம்படுத்தவும் உதவுகிறோம். அவர்களின் பந்துவீச்சை சிறப்பாக்க முயற்சிக்கிறோம்.

ஆடுகளம், சூழல் ஆகியவற்றைப் பார்த்து நாம் நம்மை சரி செய்ய வேண்டும். அதனால்தான் பீ்ல்டிங்கை அடிக்கடி மாற்றியமைத்தேன். வீரர்கள் எப்போதும் களத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான், பீல்டர்களிடம் எப்போதும் என்னை நோக்கியே இருங்கள் எனத் தெரிவித்துள்ளேன்

எனக்கு இது கடைசி சீசனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இன்னும் அது குறித்து முடிவு செய்ய 9 மாதங்கள் உள்ளன, அதிக காலம் இருக்கிறது. டிசம்பரில்தான் அடுத்து ஏலம் நடக்கிறது. நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் வருவேன்” எனத் தெரிவித்தார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

நம்பிக்கை நாயகன் கெய்க்வாட்

கெய்க்வாட், கான்வே இருவரும் தொடக்கத்திலேயே ஷமி ஓவரை எதிர்கொள்ளத் திணறினர். நல்கண்டே வீசிய 2வது ஓவரில் கெய்க்வாட் 7 ரன்னில் இருந்தபோது அடித்த ஷாட்டை சுப்மான் கில் கேட்ச் பிடிக்கவே குஜராத் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி சில வினாடிகள்கூட நீடிக்கவில்லை. நல்கண்டே வீசிய அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிர்ச்சியுடன் வெளியேறிய கெய்க்வாட் நிம்மதி பெருமூச்சுடன் பேட்டிங் செய்ய வந்தார். வந்தவுடன் அடுத்த இரு பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி விளாசி கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனால், தனக்குக் கிடைத்த 2வது வாழ்வை சிறப்பாகப் பயன்படுத்திய கெய்க்வாட் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

கெய்க்வாட் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்த்தநிலையில், கான்வே மிகவும் மந்தமாக பேட் செய்தார், அவர் அடித்த எந்த ஷாட்டும் அவருக்கு சரியாக அமையவில்லை என்பதால், பெரிய ஷாட்களுக்கு செல்லாமல் தவிர்த்தார்.

5-வது ஓவரிலிருந்தே ரஷித் கான், நூர் அகமதுவை பந்துவீச ஹர்திக் பாண்டியா அழைத்தார். நூர் அகமது பந்துவீச்சை பயன்படுத்திய கெய்க்வாட் சில பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்க்வாட் 4முறையும் அரைசதம் அடித்துள்ளார்.

10ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணியின் ஒருவிக்கெட்டைக் கூட குஜராத் அணியால் வீழ்த்த முடியவில்லை. முதல் 10 ஓவர்கள் சிஎஸ்கே கையில் இருந்தது, அடுத்த 10 ஓவர்களை குஜராத் அணி கையில் எடுத்துக்கொண்டது.

மோகித் சர்மா வீசிய 11வது ஓவரில் லாங்ஆன் திசையில் கெய்க்ட் வாட் அடித்த ஷாட்டை மில்லர் கேட்ச் பிடிக்கவே 60ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கான்வே-கெய்க்வாட் கூட்டணி 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களத்துக்குள் ஷிவம் துபே வந்தபோது, சிக்ஸர் துபே, சிக்ஸர் துபே என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.

கெய்க்வாட் ஆட்டமிழந்தபின், சிஎஸ்கே அணியில் உள்ள நடுவரிசை, கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய அளவிலான கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

3 பந்துகளைச் சந்தித்த துபே, ஒரு ரன் சேர்த்தநிலையில் நூர் அகமது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சீராக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்த சீசன் தொடக்கத்தில் கலக்கலாக பேட் செய்த, ரஹானே ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 17 ரன்கள் சேர்த்து நல்கண்டே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் தடுமாறிய கான்வே 40 ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த சிஎஸ்கே அணி, அடுத்த, 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சீசன் முழுவதும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்த அம்பதி ராயுடுவும் இதிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்பட 17 ரன்களுடன் சிறிய கேமியோயுடன் ராயுடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்ததால், சிஎஸ்கே அணி 150 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் இருந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரசிகர்களை ஏமாற்றிய தோனி

ரசிகர்களின் மிகப்பெரிய கரகோஷம், விசில் சத்தம், ஆரவாரத்துக்கு மத்தியில் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி களத்துக்கு வந்தபோது சரியாக 2 ஓவர்கள் இருந்ததால், நிச்சயம் சிஸ்கர், பவுண்டரி அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். தோனி சந்தித்த முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மோகித் சர்மா ஓவரில், தோனி ஸ்ட்ரைக்கிற்கு வருவதற்காகவே ஜடேஜா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை வழங்கினார். ஆனால் மோகித் சர்மா வீசிய ஸ்லோ பந்தில் கவர் திசையில் தோனி தூக்கி அடிக்கவே, ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்தார்.

தோனி ஒரு ரன்னில்ஆட்டமிழந்தவுடன் அரங்கு முழுவதும் மிகப்பெரிய அமைதி நிலவியது. தோனியின் சிக்ஸரையும், பவுண்டரிகளையும், ஹெலிகாப்டர் ஷாட்களையும் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களின் இதயங்களை மோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் நொறுக்கிவிட்டனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய மொயின்அலி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 20-வது ஓவரில் மொயின் அலி சிக்ஸர் அடித்து, ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். கடைசிப் பந்தில் ஜடேஜா போல்டாகி 22 ரன்னில் வெளியேறினார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

"தோல்வியைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை"

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ அடிப்படையி்ல் சில தவறுகளைச் செய்துவிட்டோம். 15 ரன்களைக் குறைவாக நாங்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பந்துகள் நல்லவிதத்தில் இருக்கும்போதே, பேட்ஸ்மேன்கள் ரன்களை ஓடி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடாமல் இருப்பது பின்னடைவு. இந்த தோல்வியைப் பற்றி அதிகமாக நினைக்கவில்லை, அடுத்த வாய்ப்பு இருக்கிறது. 15 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம், விக்கெட்டுகளையும் சீராக இழந்தோம் இதுதான் தோல்விக்கான காரணமாக இருக்கும். 2 நாட்கள் இடைவெளயில்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டாட் பந்துகளுக்கு மரக்கன்று

சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாட் பந்துகள் ஏதேனும் வீரர்கள் வழங்கினால், ஒவ்வொரு டாட் பந்துக்கும் பிசிசிஐ சார்பில் 500 மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் 34 டாட் பந்துகளைவிட்டதால், 17ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படஉள்ளது. அதேபோல குஜராத் பேட்ஸ்மேன்கள் 50 டாட்பந்துகளை விட்டுள்ளதால், 25 ஆயிரம் மரக்கன்றுகளை பிசிசிஐ நட இருக்கிறது.

சேப்பாக்கத்தில் சென்னை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்று கருதப்பட்ட சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர் என ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார் தோனி. அவர்களும் ஏதோ தோனி எழுதிய ஸ்கிரிப்டுக்கு அடிப்பதைப் போல ஆடி, துல்லியமாக ஆட்டமிழந்து சென்றார்கள்.

ஒவ்வொரு குஜராத் வீரரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு தோனி செய்திருந்த ஃபீல்டிங் வியூகம் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை வர்ணனையாளர்கள் புகழ்ந்து கூறினார்கள். அது போன்ற வியூகம் வகுப்பதில் தவறியதால்தான் குஜராத் அணி பல வாய்ப்புகளைத் தவறவிட்டதையும் காண முடிந்தது.

குஜராத் அணியில் இதுவரை சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டுக் கொண்டிருந்த பல வீரர்கள் சேப்பாக்கத்தில் தோனியின் கண்முன்னே வருவதும் போவதுமாகத்தான் இருந்தார்கள். பார்ப்பதற்கு ஏதோ அவர்கள் தோனியின் பேச்சுக்கு ஆடுவது போலத் தெரிந்தது.

குஜராத் அணியை சேப்பாக்கத்தில் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் கோப்பையை முடிவு செய்யும் இறுதிப் போட்டிக்கு 10-வது முறையாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

இதுவரை 14 ஐபிஎல் சீசன் நடந்துள்ளதில் அதில் 10-வது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இந்த சாதனையை இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியும் செய்தது இல்லை என்பதால் சிஎஸ்கே புதிய வரலாறு படைத்துள்ளது.

சிஎஸ்கே என்றால் “கம்-பேக்” கிங்ஸ்

இந்த சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூட ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி என பல்வேறு அணிகளை பைனலுக்கு கணித்தனர்.

ஆனால், சிஎஸ்கே அணியில் இருக்கும் ஜூனியர் வீரர்கள், சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு தோனி எவ்வாறு பைனலுக்கு அணியை அழைத்துச் செல்லப்போகிறார் என்ற கடுமையான விமர்சனம் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், அனைத்து விமர்சனங்களையும், கேலிப் பேச்சுகளையும், தவிடுபொடியாக்கி, 2023 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக சிஎஸ்கே அணி தகுதி பெற்றுள்ளது.

கடந்த சீசனில் 9-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே அணி கேப்டன்ஷி விஷயத்தில் பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளதாக பேசப்பட்டது. ஆனால் பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் மிகப்பெரிய “கம்பேக்” சிஎஸ்கே அணி கொடுத்திருக்கிறது.

இதேபோல 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, 2021ம் ஆண்டில் பெரிய கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. ஒட்டுமொத்தத்தில் “சென்னை சூப்பர் கிங்ஸ்” அல்ல, “சென்னை கம்பேக் கிங்ஸ்” என்றார்கள் வர்ணனையாளர்கள்.

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அப்படியொரு துல்லியமான பீல்டிங் வியூகத்தை சென்னையில் காண முடிந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சாதனை படைத்து பைனலுக்குச் செல்லும் சிஎஸ்கே

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் இருந்து முதல் ஆளாக டுவைன் பிராவோதான் ஓடிச் சென்றுவீரர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் செல்வதைக் கொண்டாடும் வகையில் மைதானத்தில் பல்வேறு வண்ண வானவேடிக்கைகளையும், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வெற்றி கொண்டாடப்பட்டது.

2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021, இப்போது 2023ம் ஆண்டில் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் பைனலிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் சென்றது, 2023ம் ஆண்டில் நடக்கும் இறுதிப்போட்டியிலும் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே பைனலுக்குள் நுழைகிறது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ஆமதாபாத்துக்கு டிக்கெட் போடுங்க!

வரும் 28-ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாட உள்ளது. நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி, குஜராத் டைட்டன்ஸுடன் 2வது தகுதிச்சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணியே, சிஎஸ்கேயுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

குஜராத் அணியுடன் இதுவரை 3 முறை மோதியும், அதில் தோல்வியைச் சந்தித்துவந்த சிஎஸ்கே அணி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங்கில் திணறியதா சென்னை?

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ருதுராஜ் கெய்க்வாட்(60ரன்கள்) கான்வே(40) ஆகியோர் சேர்த்த ஸ்கோர்தான் திருப்புமுனையாகும். முக்கிய தருணத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் ஆட்டநாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெய்க்வாட் தொடக்கத்தில் ஆட்டமிழந்தபோது அதுநோபாலாக அறிவிக்கப்பட்டதால் மிகப்பெரிய ஸ்கோரை சிஎஸ்கே எட்டியது, இல்லாவிட்டால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.

அதேபோல பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா, தீக்சனா இருவரும் 8 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, குஜராத் டைட்டன்ஸ் சரிவுக்கு முக்கியப் பங்காற்றினர்.

அதிலும் ஜடேஜா வீழ்த்திய சனகா, டேவிட் மில்லர்விக்கெட்டுகளும், தீக்சனா வீழ்த்திய, ஹர்திக் பாண்டியா, திவேட்டியா விக்கெட்டுகளும் திருப்புமுனையாகும்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

சிஎஸ்கேவுக்கு சாதகமானவை என்ன?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பனிப்பொழிவைக் காரணம் காட்டி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், சேப்பாக்கம் ஆடுகளத்தில் நினைத்தது போல், பனிப்பொழிவு பெரிதாக இல்லை. பனிப்பொழிவு இருந்தால் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டிருப்பார்கள், அது குஜராத்துக்கு சாதகமாக இருந்திருக்கும்.

ஆனால், பனிப்பொழிவு இல்லாதது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பனிப்பொழிவு இல்லாவிட்டால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் பேட் செய்வது கடினமாகிவிடும். பந்து மிகவும் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும்போது, ஷாட்களை அடிப்பது கடினமாகிவிடும். அந்தநிலையைத்தான் இன்று குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் அனுபவித்தனர்.

சிஎஸ்கே அணியில் கெய்க்வாட், கான்வே தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேன்களும் ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய கேமியோவுடன் சென்றதால், ஸ்கோர் 172 ரன்கள் மிக அனாசயமாக வந்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம்.

தகுதிச் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தனது சொந்த மைதானத்தில் நடந்தது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகம். குறிப்பாக ரசிகர்களின் ஆதரவு, வரவேற்பு, உற்சாகப்படுத்துதல் ஆகியவை சிஎஸ்கே வீரர்களுக்கு தார்மீக ரீதியாகவே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வழங்கியது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கோட்டை விட்ட குஜராத்- தவறுகள் என்னென்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்களின் தோல்வி்தான். மிகவும் முக்கியமான ஆட்டத்தில்கூட விருதிமான் சாஹா விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தது, அடுத்துவரும் பேட்ஸ்மேனுக்கு அழுத்தத்தைத் தரும் என்பதை உணரவில்லை. தொடக்க வீரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்திருந்தால், நடுவரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பதற்றமின்றி, ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் விளையாடுவார்கள்.

ஆனால், தொடக்க வீரர் சொதப்பும் பட்சத்தில் அதன் சுமை அடுத்துவரும் வீரர்கள் மீதே கடத்தப்படும். குஜராத் அணியில் ஆழமான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும் கூட சேப்பாக்கம் போன்ற சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகஇருக்கும், பந்துகள் மெதுவாக வரும் ஆடுகளத்தில் கணித்து ஆடாமல் கோட்டைவிட்டனர்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என குஜராத் பேட்ஸ்மேன்கள் நம்பியதற்கு மாறாக செயல்பட்டது. குஜராத் பேட்ஸ்மேன்கள் தங்கள் விருப்பம் போல் ஸ்வீப் ஷாட், ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை ஆட முடியாத அளவுக்கு பந்து ஆடுகளத்தில் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வந்தது. இதனால்தான் விக்கெட்டுகளை விரைவாக குஜராத் பேட்ஸ்மேன்கள் இழந்தனர்.

எந்த வீரர்களுக்கு இடையேயும் பெரிதாக பார்ட்னர்ஷிப் ஏதும் அமைக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கில்-விஜய் சங்கர் கூட்டணி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்தநிலையில் இந்த ஆட்டத்தில் சொதப்பினர்.

இரு சதங்களை அடித்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த சுப்மான் கில் பந்தைக்கணித்து ஆடத் தவறியதால்தான் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மான் கில் களத்தில் கடைசி வரை இருந்தால் ஆட்டத்தை வென்று கொடுத்துவிடுவார் என்று எண்ணிய தோனி, தீக்சனா மூலம் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. தீக்சனா பந்தில் கில் ஆட்டமிழக்காமல், கவனமாக ஆடி தப்பித்தார். இதையடுத்து, தோனி தனது பி பிளானை செயல்படுத்தவே அந்த வலையில் கில் சிக்கினார்.

தீபக் சாஹருக்கு கடைசி ஓவராக இருந்தநிலையில் அதை பொறுமையாக ஆடி கில் கடந்திருக்கலாம் அதைவிடுத்து டீப் ஸ்குயர் லெக்கில் தூக்கி அடித்து கான்வேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை இழந்தார். ஒருவேளை கில் கடைசி வரை களத்தில் இருந்திருந்தால், தோல்விக்கான 15 ரன்களை நிச்சயம் அடித்துக் கொடுத்திருப்பார்.

சீராக விக்கெட்டுகளை இழந்ததும், குஜராத் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். தொடக்கத்தில் 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 72 ரன்களில் இருந்து, 98 ரன்களுக்கு இடையே மட்டும் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது தோல்விக்கு முக்கியக் காரணம். அதிலும் 7வது ஓவர் முதல் 15வது ஓவர்கள்வரை 51 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கில், ரஷித்கான் போராட்டம் ஏன் நீடிக்கவில்லை?

குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில்(40), ரஷித் கான்(30) ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில்நிலவிய அழுதத்தைத் தாங்க முடியாமல், ஆடுகளத்தின் தன்மையை அறியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அதிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடனே ஆப்சைடில் அந்த ஷாட்டை அடித்தார். ஜடேஜாவுக்கு கேட்ச் பயிற்சி அளித்தார்போல் எந்த சிரமமும் இன்றி பாண்டியா அடித்த பந்து அவரின் கைகளில் அமர்ந்து கொண்டது.

ஜடேஜா வீசும் பந்துகள் பெரும்பாலும் டர்ன் ஆகாமல் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் செல்லும். ஆனால் மில்லரை ஆட்டமிழக்கச் செய்த ஜடேஜா வீசிய பந்து, அற்புதமாக டர்ன் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. ஜடேஜா வீசும் பந்து டர்ன் ஆகினாலே , ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

மற்றவகையில் விஜய் சங்கர்(14), திவேட்டியா(3), சனகா (17) என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளிக்கும் வகையில்தான் பேட் செய்தனர். 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி, அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சுப்மான் கில் ஆட்டமிழந்தபின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் சிஎஸ்கே எடுத்துக்கொண்டுவிட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தனித்தனியாக ஸ்கெட்ச் போட்டு பந்துவீசி விக்கெட்டை சாய்த்தனர். அதிலும் நீல்கண்டேவை ரன் அவுட் செய்த சேனாபதி, கில்லுக்கு சொல்லிவைத்தார்போல் பந்துவீசி டீப் ஸ்குயர் லெக்கில் கான்வே பிடித்த கேட்ச், ரஷித் கானுக்கு கான்வே பிடித்த கேட்ச் ஆகியவை தோனியின் கேப்டன்ஷி ஸ்கெட்சுக்கு உதாரணங்கள்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

கடைசி போட்டியா, தோனி ஓய்வா?

சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் “ ஐபிஎல் மிகப்பெரியது, இது மற்றொரு இறுதி ஆட்டம் என்று கூற முடியாது. 10 அணிகள் பங்கேற்றதால் போட்டிகள் கடினமாக இருந்தன.கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம், எங்களின் வீரர்களின் சிறப்பு தன்மைகள் வெளிப்பட்டன. ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்துள்ளனர். இந்த சீசன் முழுமைக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகள் பெரும்பகுதி கிடைக்கவில்லை.

ஆட்டம் 30 நிமிடங்களில் எங்கள் பக்கம் திரும்பியது. சேப்பாக்கம் ஆடுகளம் இதுபோன்று இருந்தால் ஜடேஜா பந்துவீச்சை ஆடுவது கடினம். நாங்கள் அணிக்குள் நல்ல சூழலை உருவாக்க முயல்கிறோம், வேகப்பந்துவீச்சாளர்கள் பலத்தை குறித்து அடிக்கடி உணர்த்துகிறோம், அவர்களின் திறமையை மேம்படுத்தவும் உதவுகிறோம். அவர்களின் பந்துவீச்சை சிறப்பாக்க முயற்சிக்கிறோம்.

ஆடுகளம், சூழல் ஆகியவற்றைப் பார்த்து நாம் நம்மை சரி செய்ய வேண்டும். அதனால்தான் பீ்ல்டிங்கை அடிக்கடி மாற்றியமைத்தேன். வீரர்கள் எப்போதும் களத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான், பீல்டர்களிடம் எப்போதும் என்னை நோக்கியே இருங்கள் எனத் தெரிவித்துள்ளேன்

எனக்கு இது கடைசி சீசனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இன்னும் அது குறித்து முடிவு செய்ய 9 மாதங்கள் உள்ளன, அதிக காலம் இருக்கிறது. டிசம்பரில்தான் அடுத்து ஏலம் நடக்கிறது. நான் எப்போதும் சிஎஸ்கேவுடன் வருவேன்” எனத் தெரிவித்தார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

நம்பிக்கை நாயகன் கெய்க்வாட்

கெய்க்வாட், கான்வே இருவரும் தொடக்கத்திலேயே ஷமி ஓவரை எதிர்கொள்ளத் திணறினர். நல்கண்டே வீசிய 2வது ஓவரில் கெய்க்வாட் 7 ரன்னில் இருந்தபோது அடித்த ஷாட்டை சுப்மான் கில் கேட்ச் பிடிக்கவே குஜராத் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி சில வினாடிகள்கூட நீடிக்கவில்லை. நல்கண்டே வீசிய அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிர்ச்சியுடன் வெளியேறிய கெய்க்வாட் நிம்மதி பெருமூச்சுடன் பேட்டிங் செய்ய வந்தார். வந்தவுடன் அடுத்த இரு பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி விளாசி கெய்க்வாட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனால், தனக்குக் கிடைத்த 2வது வாழ்வை சிறப்பாகப் பயன்படுத்திய கெய்க்வாட் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.

கெய்க்வாட் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்த்தநிலையில், கான்வே மிகவும் மந்தமாக பேட் செய்தார், அவர் அடித்த எந்த ஷாட்டும் அவருக்கு சரியாக அமையவில்லை என்பதால், பெரிய ஷாட்களுக்கு செல்லாமல் தவிர்த்தார்.

5-வது ஓவரிலிருந்தே ரஷித் கான், நூர் அகமதுவை பந்துவீச ஹர்திக் பாண்டியா அழைத்தார். நூர் அகமது பந்துவீச்சை பயன்படுத்திய கெய்க்வாட் சில பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்க்வாட் 4முறையும் அரைசதம் அடித்துள்ளார்.

10ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணியின் ஒருவிக்கெட்டைக் கூட குஜராத் அணியால் வீழ்த்த முடியவில்லை. முதல் 10 ஓவர்கள் சிஎஸ்கே கையில் இருந்தது, அடுத்த 10 ஓவர்களை குஜராத் அணி கையில் எடுத்துக்கொண்டது.

மோகித் சர்மா வீசிய 11வது ஓவரில் லாங்ஆன் திசையில் கெய்க்ட் வாட் அடித்த ஷாட்டை மில்லர் கேட்ச் பிடிக்கவே 60ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கான்வே-கெய்க்வாட் கூட்டணி 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களத்துக்குள் ஷிவம் துபே வந்தபோது, சிக்ஸர் துபே, சிக்ஸர் துபே என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.

கெய்க்வாட் ஆட்டமிழந்தபின், சிஎஸ்கே அணியில் உள்ள நடுவரிசை, கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறிய அளவிலான கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

3 பந்துகளைச் சந்தித்த துபே, ஒரு ரன் சேர்த்தநிலையில் நூர் அகமது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சீராக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்த சீசன் தொடக்கத்தில் கலக்கலாக பேட் செய்த, ரஹானே ஒரு சிக்ஸர் உள்ளிட்ட 17 ரன்கள் சேர்த்து நல்கண்டே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் தடுமாறிய கான்வே 40 ரன்னில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த சிஎஸ்கே அணி, அடுத்த, 38 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சீசன் முழுவதும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்த அம்பதி ராயுடுவும் இதிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்பட 17 ரன்களுடன் சிறிய கேமியோயுடன் ராயுடு ஆட்டமிழந்து வெளியேறினார்.

15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்ததால், சிஎஸ்கே அணி 150 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் இருந்தது.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

ரசிகர்களை ஏமாற்றிய தோனி

ரசிகர்களின் மிகப்பெரிய கரகோஷம், விசில் சத்தம், ஆரவாரத்துக்கு மத்தியில் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி களத்துக்கு வந்தபோது சரியாக 2 ஓவர்கள் இருந்ததால், நிச்சயம் சிஸ்கர், பவுண்டரி அடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். தோனி சந்தித்த முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மோகித் சர்மா ஓவரில், தோனி ஸ்ட்ரைக்கிற்கு வருவதற்காகவே ஜடேஜா ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை வழங்கினார். ஆனால் மோகித் சர்மா வீசிய ஸ்லோ பந்தில் கவர் திசையில் தோனி தூக்கி அடிக்கவே, ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடித்தார்.

தோனி ஒரு ரன்னில்ஆட்டமிழந்தவுடன் அரங்கு முழுவதும் மிகப்பெரிய அமைதி நிலவியது. தோனியின் சிக்ஸரையும், பவுண்டரிகளையும், ஹெலிகாப்டர் ஷாட்களையும் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களின் இதயங்களை மோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் நொறுக்கிவிட்டனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய மொயின்அலி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 20-வது ஓவரில் மொயின் அலி சிக்ஸர் அடித்து, ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். கடைசிப் பந்தில் ஜடேஜா போல்டாகி 22 ரன்னில் வெளியேறினார்.

தோனியின் வியூகம்

பட மூலாதாரம்,BCCI/IPL

"தோல்வியைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை"

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ அடிப்படையி்ல் சில தவறுகளைச் செய்துவிட்டோம். 15 ரன்களைக் குறைவாக நாங்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். பந்துகள் நல்லவிதத்தில் இருக்கும்போதே, பேட்ஸ்மேன்கள் ரன்களை ஓடி எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடாமல் இருப்பது பின்னடைவு. இந்த தோல்வியைப் பற்றி அதிகமாக நினைக்கவில்லை, அடுத்த வாய்ப்பு இருக்கிறது. 15 ரன்கள் கூடுதலாக வழங்கிவிட்டோம், விக்கெட்டுகளையும் சீராக இழந்தோம் இதுதான் தோல்விக்கான காரணமாக இருக்கும். 2 நாட்கள் இடைவெளயில்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

டாட் பந்துகளுக்கு மரக்கன்று

சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாட் பந்துகள் ஏதேனும் வீரர்கள் வழங்கினால், ஒவ்வொரு டாட் பந்துக்கும் பிசிசிஐ சார்பில் 500 மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் 34 டாட் பந்துகளைவிட்டதால், 17ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படஉள்ளது. அதேபோல குஜராத் பேட்ஸ்மேன்கள் 50 டாட்பந்துகளை விட்டுள்ளதால், 25 ஆயிரம் மரக்கன்றுகளை பிசிசிஐ நட இருக்கிறது.