பழக்கடைகள் அனைத்தும் திடீர் பரிசோதனை




 


பாறுக் ஷிஹான்

 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸின்  வழிகாட்டலில் பழக்கடைகள் திங்கட்கிழமை (22) முதல்  பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பழக்கடைகளின் தரத்தைப்பேணும் வகையிலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து பழக்கடைகளிலும்
 பரிசோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.
 
இதன் போது  மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பழங்களை செயற்கையாக பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதன் இரசாயன தாக்கதின் விளைவுகளை அறியாமல் அதனை உட்கொண்டு பல நோய்களுக்குள்ளாகின்றனர்.

எனவே  இதனை தடுக்கும் பொருட்டு இவ்வாறு இரசாயனம் கலந்து தெளிப்பதனையும் இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தகூடிய உபகரணங்களையும் மற்றும் அழுகிய நிலையில் பழங்களையும் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி  மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர்  பொது சுகாதாரப் பரிசோதகர்கள்  மற்றும் அலுவலக ஊழியர்களும் இப்பரிசோதனை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்