இல்ல விளையாட்டு போட்டி, ஆரம்பம்




 


(வி.ரி. சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஆரம்பமாகி இருக்கின்றது.

 வித்தியாலய அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன், பாடசாலைக்கொடியை ஏற்றி முதல் நாள் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

 குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய இல்லங்களுக்கிடையிலான போட்டியில் முதல் நாள் நிகழ்வாக கரப்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.