காரைதீவுக் கடலில் விபத்துக்குள்ளானது




 வி.ரி. சகாதேவராஜா)



காரைதீவுக்கடலில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆழ்கடல் பாரிய படகு இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.

காரைதீவைச் சேர்ந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பாரியப்படகே இவ்விதம் கடலில் சேதத்திற்குள்ளாகியது.
 சேதம் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக இன்னும் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான படகு கடலுக்குள் மூழ்கிய வண்ணம் இருந்தது .இதனை அறிந்த படகு உரிமையாளர் மற்றும் காரைதீவு கடற்படையினர் இணைந்து படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .

அதை வேளையில் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்த ஒரு தொகுதி வலை மற்றும் ஒரு படகால் கட்டியிழுத்து வரப்பட்டு ஜேசிபி கனரக வாகன உதவியுடன் கரைக்கு நண்பகல் அளவில் கொண்டு வரப்பட்டது.

 விபத்து தொடர்பாக காரைதீவு போலீசிலும் கடற்றொழில் அலுவலகத்திலும் முறையிடப்பட்டிருக்கின்றது.