சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டி




 


வி.ரி. சகாதேவராஜா)

 இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டியில்  தேசியரிதியில் மட்டக்களப்பு அணி  முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற மல்யுத்த போட்டி கடந்த 25.02.2023ம்திகதி பொலநறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்றது. இப் போட்டியில் மட்டக்களப்பு சிறைச்சாலையை சேர்ந்த அணி கலந்து கொண்டு 9 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4வெண்கல பதக்கங்களை பெற்று அகில இலங்கை சிறைச்சாலைகளுக்குள் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது..

இப் போட்டியில் காரைதீவு மண்ணைச் சேர்ந்த  இரு இளம் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
  
காரைதீவைச்சேர்ந்த அ.பிறேமகாந்தன் 97-125கிலோ எடைகொண்ட போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கமும் மற்றும் அஜித் 64-71கிலோ எடைகொண்ட போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.