----
( கல்முனை நிருபர்)
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற
"இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டம்,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலில்,கல்முனை பிரதேச இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கல்முனை கல்முனை கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் மரநடுகை இன்று(07)இடம்பெற்றது
இதன் போது பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா,ஆசிரி யர்கள்,
சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம். எம்.சமிஹூல் இலாஹி,கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment