பாறுக் ஷிஹான்
நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்க்களை வங்கி ஊடாக மோசடி செய்த குழுவினர் கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த வலையில் சிக்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(9) அன்று கல்முனை பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் கணேசன் என்பவர் முறைப்பாடு ஒன்றினை அளித்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில் நடன ஆசிரியர் நியமனம் ஒன்றினை பெறுவதற்கு கடந்த திங்கட்கிழமை(6) அன்று ஒரே நாளில் கட்டங்கட்டமாக முறையே 600000 120000 120000 என 840000 இலட்சம் ரூபாய்க்களை வங்கி ஊடாக ஒருவருக்கு வைப்பு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த நியமனத்தை தனது மகனுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே குறிப்பிட்ட பணத்தொகைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் இந்தியாவில் தனது மகன் நடன பாடத்தில் பட்டத்தை நிறைவு செய்திருந்த இந்த நியமனத்தை பெற முயற்சித்திருந்ததாகவும் கல்வி அமைச்சில் உள்ள ஒரு பதவி நிலை உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளதை பின்னர் அறிந்துள்ளதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற பொலிஸ் கன்ஸ்டபிள்களான முஜிசாத் (88490) விஜிதரன்(90954) பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் செவ்வந்தி(13086) குழுவினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய கைது செய்துள்ளனர்.
Post a Comment