இலங்கையில் குரங்கு அம்மை




 


இலங்கையில் குரங்கு அம்மை ( மங்கி பொக்ஸ்) பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய
20 வயதான ஆண் ஒருவருக்கே குறித்த நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த நபரிடம் இருந்த நோய் அறிகுறிகளை அடுத்து சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் முன்னெடுத்த பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.