இலவச சத்திர சிகிச்சை முகாம்




 


-

கண்களில் படர்ந்துள்ள வெண் படலத்தினை (Cataract) அகற்றுவதற்கான 

இலவச சத்திர சிகிச்சை முகாம் தொடர்பாக அன்புப் பொது மக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர்,

السلام عليكم ورحمة الله و بركاته

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இம் மாதம் ஊர் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள கண் சத்திர சிகிச்சை முகாமுக்காக சம்மேளன காரியாலயத்தில் பதிவு செய்துள்ள பொது மக்களினது கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம். 

கண்களில் வெண் படலம் படர்ந்த நோயாளிகளுக்கான (Cataract) சத்திர சிகிச்சைக்கு முன்னரான மருத்துவ பரிசோதனைகள் இன்ஷா அள்ளாஹ் எதிர்வரும் 2022.11.08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

அந்தவகையில், சம்மேளன காரியாலயத்தில் மருத்துவ பரிசோதனைப் பிரதிகளினை சமர்ப்பித்து தங்களது பெயர் விபரங்களினை பதிவு செய்துள்ளவர்கள் கண் மருத்துவ பரிசோதனைக்கான தங்களது முன் அனுமதி அட்டையினை இன்ஷா அள்ளாஹ் எதிர்வரும் 2022.11.06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 04:30 மணியினைத் தொடர்ந்து உரியவர் அல்லது குடும்ப உறவினர் ஒருவர் சம்மேளன காரியாலயத்திற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

நன்றி.

இவ்வண்ணம்,

தலைவர்/பொதுச் செயலாளர்,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,

காத்தான்குடி.

2022.11.05