மண்சரிவு அபாய எச்சரிக்கை




 




நாட்டில் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, குருநாகல், கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடி மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.