கடற்கரை சிரமதான நிகழ்வும், மரம் நடுகையும்




 


நூருல் ஹுதா உமர்


சர்வதேச  இளைஞர் தினத்தினை முன்னிட்டு "இளைஞர் கழகங்களின் மூலமாக தன்னார்வ வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்" என்பதை கருப்பொருளாக கொண்ட கடற்கரை சிரமதானமானது   சாய்ந்தமருது  கடற்கரை பூங்காக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றதுடன் மரம் நடுகை  நிகழ்வானது சாய்ந்தமருது சதுக்கத்திலும், அதற்கு அண்மித்த பகுதியிலும், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திலும்
SLYC  இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.

SLYC இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்லமின் ஒழுங்குபடுத்துதலில் அக்கழகத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரியும், இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.டீ .எம். ஹாரூன், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, பிரதேச இளைஞர், யுவதிகள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.