சிவில் பாதுகாப்பு குழுவின் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு




 


வி.சுகிர்தகுமார்   

  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நிலை காரணமாக பாதிக்கப்பட்டு மிகவும்  கஸ்டத்தில்  வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே குறித்த உலர் உணவுப்பொதிகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவேந்திரகுமார சுவாமி குடும்பத்தின் நிதி ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.
அன்பின் வழி நின்று கரம் கொடுத்து உதவும் கருணை இல்லங்கள் எனும் கருப்பொருளில் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் இ.சுவர்ணராஜ் தலைமையில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் சிவில் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி எச்.எம்.ரத்நாயக்க  உறுப்பினர் ச.அனுராதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது 50 பேருக்கான நிவாரணம் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.