வி.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா (கல்லூரி) தேசிய பாடசாலைக்கு மூன்று வருடங்களின் பின் நிரந்தர அதிபர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர சேவையில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களே புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நேர்முகப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இவருக்கான நியமனத்தை அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கல்வி சேவை ஆணைக்குழு செயலாளரின் அனுமதியின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் இம்மாதம் 03ஆம் திகதி தொடக்கம் செயற்படும்; வகையிலாக நேற்றுமுன்தினம் வழங்கி வைத்தார்.
இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 (ளுடுPளு-1) தரத்தை சேர்ந்த இவர் இதே பாடசாலையில் 1992ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் போட்டி பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவை-2 (ளுடுPளு-2) இற்கு தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் இதே பாடசாலையில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டு 2013 இல் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 இல் இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 இற்கு பதவி உயர்வு பெற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாகவும் (டீ.யு) அரசறிவியலில் முதுகலைமாணி(ஆ.யு) பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி(ஆ.நுன) பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவில் அதி சிறப்பு சித்தியும் பட்ட பின் கல்வி முகாமைத்துவத்தில் சிறப்பு சித்தியையும் பெற்ற இவர் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர சேவையில் உள்ள ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களே புதிய அதிபராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நேர்முகப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இவருக்கான நியமனத்தை அரசாங்க சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கல்வி சேவை ஆணைக்குழு செயலாளரின் அனுமதியின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் இம்மாதம் 03ஆம் திகதி தொடக்கம் செயற்படும்; வகையிலாக நேற்றுமுன்தினம் வழங்கி வைத்தார்.
இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 (ளுடுPளு-1) தரத்தை சேர்ந்த இவர் இதே பாடசாலையில் 1992ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் போட்டி பரீட்சை மூலம் இலங்கை அதிபர் சேவை-2 (ளுடுPளு-2) இற்கு தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் இதே பாடசாலையில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டு 2013 இல் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 இல் இலங்கை அதிபர் சேவை வகுப்பு-1 இற்கு பதவி உயர்வு பெற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாகவும் (டீ.யு) அரசறிவியலில் முதுகலைமாணி(ஆ.யு) பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி(ஆ.நுன) பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவில் அதி சிறப்பு சித்தியும் பட்ட பின் கல்வி முகாமைத்துவத்தில் சிறப்பு சித்தியையும் பெற்ற இவர் இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment