(க.கிஷாந்தன்)
ஆயிரம் ரூபாவை நாளாந்த சம்பளமாக பெற்று தருவதாக கோரி தொழிலாளர்களின் அடிவயிற்றில் தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளமும் அடித்தது. இதனை ஞாபகப்படுத்தி இந்த நம்பிக்கை துரோக செயலை கண்டித்தும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இன்றைய பொருளாதார நிலையையில் தொழிலாளர்களின் நிலையுணர்ந்து உயர்த்த அரசுக்கு அழுத்தம் பிரயோகித்து அட்டன் நகரில் ஜே.வி.பி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை 03.03.2019 அன்று நடத்தினர்.
சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், இதன்போது வழியுறுத்தியமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment